பசி கொடியது


பசி கொடியது


11.  ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

    இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்

    என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

    உன்னோடு வாழ்தல் அரிது.

(பதவுரை) இடும்பைகூர் என் வயிறே-துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்-(கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.

வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை எ - ம். (11)

படித்ததில் பிடித்தவை
October 07, 2024
0

Search

Contact Me