ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஆண் : ஒரு மாலையிடவும்
சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ
ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
பெண் : மேள தாளம் முழங்கும்
முதல் நாள் இரவு
மேனி மீது எழுதும்
மடல் தான் உறவு
தலையில் இருந்து பாதம்
வரையில் தழுவி கொள்ளலாம்….
ஆண் : அதுவரையில் நான்…..
அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைக் கடலில்தான்
அலையும் படகோ
பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
பெண் : ஒரு மாலையிடவும்
சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ
ஆண் : காற்று வந்து தொடத்தான்
கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான்
நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள்
சொல்ல எவரும் இல்லையே
பெண் : பிறர் அறியாமல்…….
பிறர் அறியாமல்
பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது
பெண் : வீணை மீது விரல்கள்
விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள்
விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயம் ஆகும்
இனிய வீணை நான்
ஆண் : சுதி விலகாமல்
இணையும் நேரம்
சுவைக் குறையாமல்
இருக்கும் கீதம்
பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன
ஆண் : பூவிதழ் மூடியதென்ன
பெண் : என்னிடம் நாடியதென்ன
ஆண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறந்தாலும்
பெண் : அந்த வேளை வரையில்
காலை உனது உள்ளம் பொறுக்காதோ
Related Posts
Favourite songs
September 03, 2024
0